கோவையில் அடுத்தடுத்து 8 கடைகளில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை எட்டிமடை கடைத்தெருவில் உள்ள அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம், மற்றும் சிசிடிவி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை க.க.சாவடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் உள்ள கடைத்தெருவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் 3 கடைகளில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எட்டிமடை பகுதியில் உள்ள எதிர் எதிரே அமைந்துள்ள 2 வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, செல்போன் கடை, ஹார்வேர்ஸ், சலூன், மளிகை கடை, பேன்ஸி கடை என அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடைகளில் பதிவான கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் அதிகாலை சுமார் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டிமடை பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...