'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் ஆகிறது -சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர்

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும் என கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும், தொழில்துறையினர் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவைக்கு வந்து இருந்த மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம், இந்திய தொழில் வர்த்தகசபை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். டெல்லியிலும் அவரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 



இதைத்தொடர்ந்து, கோவை–பெங்களூரு இடையே 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படும் என்று சென்ற வருடம்  அறிவித்தார். இந்நிலையில், புதிய ரயிலுக்கான நேர விவரம் இதன்படி கோவை–பெங்களூரு புதிய ரயில் பகல்நேர ரயிலாக இயக்கப்பட உள்ளதாகவும், கோவையில் இருந்து 22666 என்ற எண்ணுள்ள உதய் எக்ஸ்பிரஸ் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூரு போய் சேருகிறது. இதேபோல் பெங்களூரில் இருந்து 22665 என்ற உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடைகிறது. புதிய ரயில் இயக்கப்படுவதற்கான தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், 2017ம் ஆண்டில் ஜனவரி மாதம் கோவையில் 'உதய் எக்ஸ்பிரஸ்' விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. 

இது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறுகையில்; கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பணிகள் நடந்து வருகிறது. உதய் எக்ஸ்பிரஸ் (குளிர்சாதனை டபுள் டக்கர் ரயில்) ரயில் எண் - 22666 - 22665 கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை அதிவிரைவு ரயில். இந்த ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும். பயணநேரம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. தற்போது வரை ஒரு சில பெட்டிகள் மட்டுமே உள்ளது. விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...