உடுமலை குட்டைதிடல் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் - உடனடியாக அகற்ற வலுக்கும் கோரிக்கை!

உடுமலை அருகேயுள்ள குட்டைத்திடல் பகுதியில் அனுமதியில்லாமல் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைத்திடல்,கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்படுவதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை அடுத்த குட்டைத்திடல் பகுதியில் அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், இங்குள்ள வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.



குட்டைத்திடல் பகுதியானது போதிய பாதுகாப்பு இல்லாமல் அமைந்துள்ளதால், குப்பை, கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.



மேலும் இந்த குட்டை திடல் பகுதியை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில், உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபம், காந்தி சிலை, முதற்கிளை நுாலகம், காவல் நிலையம் அமைந்துள்ள நிலையில், இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் மார்ச் 23ஆம் தேதி நோன்பு சாத்தப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும் நிலையில் குட்டைதிடல் பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...