பல்லடம் அருகே தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு!

பல்லடம் அடுத்த கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் உள்ள முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் சிலர் தீவைத்த நிலையில், தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் கருகி சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்துமுட்டிபாளையம் கிராமம்.



இந்த கிராமத்தில், 8 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7,000 மரக்கன்றுகள் ஊர் மக்களால் நடப்பட்டு முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வேம்பு, புங்கன், பூவரசன், அத்தி, நெல்லி போன்ற பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பூங்காவிற்கு வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் முல்லைவனம் பகுதியில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.



மர்மநபர்கள் தீ வைக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



புற்களுக்கு வைக்கப்பட்ட தீ மளமளவென பரவியதால் ஐநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்து நாசமானது.

இதனை கண்ட அப்பகுதி மக்களே இணைந்து, தண்ணீர் ஊற்றிய நிலையில், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மர்ம நபர்கள் வனப்பகுதிக்கு தீ வைத்ததாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...