கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் - எம்.பி நடராஜன் வரவேற்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கோவைக்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில்வே சேவை என்கிற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு கோவை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எம்.பி பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக எம்.பி பி.ஆர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகையை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளிலிருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளபடியே இது யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு பெரும் உதவி புரியும். இது பெண்களுக்கான உரிமத்தொகையாகவே இருக்கும்.

இதேபோன்று கோவை மாநகரம் என்றாலே போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்றாகிப்போனது. இதனை கருத்தில் கொண்டு 2009ல் நான் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலத்திலிருந்து மெட்ரோ ரயில் சேவையின் அவிசியம் குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இதன்தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிபுணர் ஸ்ரீதரனை கோவை மாவட்டத்திற்கு வரவழைத்து மெட்ரோ ரயில் சாத்தியங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்ள வைத்தோம். கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அன்றே உறுதிப்படுத்தினோம்.

ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கடந்த அதிமுக அரசு இதனை கிடப்பில் போட்டது. தற்போது தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில், கோவையில் 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவை மாநகர மக்களின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று, மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு, மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதி திராவிட மாணவர்களுக்காக 100 கோடியில் விடுதிகள், கோவையில் 172 கோடி ரூபாய் மதிபீட்டில் செம்மொழி பூங்கா, கோவையில் புதிய சிப்காட் பூங்காக்கள், கோவை மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவை உள்ளிட்ட அறிவிப்புகள் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது என்றார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...