தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து - 22 பேர் காயம்!

தாராபுரம் அடுத்த சோமனூத்து பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் சத்திரம் பகுதியில் கூலி வேலைக்குச் சென்று திரும்பிய சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 22பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சத்திரம் பகுதிக்கு வெங்காயம் அறுவடைக்கு சென்று விட்டு மாலை சரக்கு வாகனத்தில் வீடு திரும்பினர்.

இவர்கள் பயணித்த சரக்கு வாகனம் சோமனூத்து என்ற இடத்தில் வந்த போது, பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த லட்சுமி, முருகம்மாள், ஈஸ்வரி, மாரியம்மாள், காளியம்மாள் உட்பட 18 பேருக்கு லேசான காயமும், 4 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.



பலத்த காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் தாராபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...