கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க ஆலோசனை கூட்டம்

கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குரும்பர் இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



கோவை: குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற உள்ள குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலை. ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குரும்பர்‌ இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைப்பது, அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது, கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ள குரும்பர் இன மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

குரும்பர் இன மக்களை அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தால் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க கூடிய சூழல் உருவாகும். குரும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதற்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...