பல்லடம் இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - 3வது நாளாக தொடரும் போராட்டம்!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், முறையாக சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இந்த ஆலை இயங்கி வருவதாகவும், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்நிலையில் இந்த ஆலைக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்கக் கூடாது என கூறி ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து ஆலையை மூடக்கோரி மூன்று நாட்களுக்கு அப்பகுதி மக்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை பாடலாக பாடி ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலைக்கான உரிமத்தை மீண்டும் வழங்கக் கூடாது எனவும், மீறி உரிமம் வழங்கினால் எங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...