வால்பாறையில் பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்று திறப்பு!

வால்பாறையில் உள்ள அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் விதமாக சாலையோர சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு உள்ளிட்டோர் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர சுவர்களில் வரையப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் படங்களை நகராட்சி தலைவர் இன்று திறந்து வைத்தார்.

வால்பாறை பகுதியில் பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இதில் அறிய வகையான சிங்கவால் குரங்கு, மற்றும் இருவாச்சி பறவைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க வன துறையினரும் NCF தன்னார்வலர்கள் இணைந்து ஆராய்ச்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

NCF தன்னார்வலர் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளை ஆராய்ச்சி செய்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.



பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக வால்பாறை டவுன் பகுதியில் உள்ள சுவர்களில் பறவைகள் மற்றும் விலங்குகளை படம் வரையப்பட்டன. முதல் கட்டமாக நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் உள்ள சுவற்றில் அப்பகுதியில் வாழும் 38 பறவை மற்றும் விலங்குகள் படம் வரையப்பட்டன.



சுவர்களில் பறவையின் படமும் அதன் பெயரும் வரையப்பட்டுள்ளன.



இதனை இன்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு மற்றும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனை அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வரையப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் NCF தன்னார்வ நிறுவனர் திவ்யா, சங்கரராமன், கணேஷ், ரகுநாத், ஶ்ரீநிவாசன், அஷ்னி, சதிஷ் குமார், ஸ்டெல்லா, மூர்த்தி, பிரகாஷ், சுமதி, அகில், ஷாமா, பவித்ரா மற்றும் வரைபட கலைஞர் சர்டாஜ், மணாலி, மாதவன், மகாலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...