கோவை பெண்கள் சிறையில், மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்!

கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ‘வரும் முன் காப்போம்’ என்ற எண்ணத்தில், பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படி கோவை பெண்கள் தனிகிளை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முக சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் மருத்துவ சோதனைகள் நடைபெற்றது.

செந்தமிழ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ''வரும் முன் காத்தல்" என்ற எண்ணத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்க மருத்துவர்கள் ராதிகா, சிலம்புசெல்வி மற்றும் சுதா ஆகியோர் மூலம் பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை நடைபெற்றது.

இந்த முகாமில் இவ்வகையான புற்றுநோய் வரக்காரணம், அதனை தவிர்க்கும் வழிமுறைகள், எவ்வாறு கண்டறிய வேண்டும் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் பெண் சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பெண் சிறை வாசிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...