கோவை பெண்கள் சிறையில், மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்!

கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ‘வரும் முன் காப்போம்’ என்ற எண்ணத்தில், பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படி கோவை பெண்கள் தனிகிளை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முக சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் மருத்துவ சோதனைகள் நடைபெற்றது.

செந்தமிழ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ''வரும் முன் காத்தல்" என்ற எண்ணத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்க மருத்துவர்கள் ராதிகா, சிலம்புசெல்வி மற்றும் சுதா ஆகியோர் மூலம் பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை நடைபெற்றது.

இந்த முகாமில் இவ்வகையான புற்றுநோய் வரக்காரணம், அதனை தவிர்க்கும் வழிமுறைகள், எவ்வாறு கண்டறிய வேண்டும் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் பெண் சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பெண் சிறை வாசிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...