கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது - சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ கஞ்சா, ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலுள்ள ரயில்வே பாலம் அருகே போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துவந்த சூர்யா (29) மற்றும் ஸ்ரீ ராகவேந்தர் (25) ஆகியோரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் உயர் ரக இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சூர்யா மீது ஏற்கனவே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகள் நடந்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சரவணம்பட்டி பகுதியில் அஞ்சுகம் நகர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவபிரசாத் (25) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைதான சிவப்பிரசாத் மீது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில் கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார் ராமநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிர்மல்குமார் (26) என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, கஞ்சா பொட்டலங்கள், ஒரு ஆட்டோ, ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு பகுதிகளில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...