கோவையில் பூட்டிய வீட்டில் தீவிபத்து - போலீசார் தீவிர விசாரணை

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி ராமசாமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி, மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா (வயது57), இவர் 13 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு, உக்கடம் பகுதியில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வித்யா வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு காலை பத்து மணியளவில் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் வித்யாவின் வீட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும், வீட்டிலிருந்த டிவி, பிரோ, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகிநாசமாயின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...