கோவையில் பூட்டிய வீட்டில் தீவிபத்து - போலீசார் தீவிர விசாரணை

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி ராமசாமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி, மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா (வயது57), இவர் 13 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு, உக்கடம் பகுதியில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வித்யா வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு காலை பத்து மணியளவில் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் வித்யாவின் வீட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும், வீட்டிலிருந்த டிவி, பிரோ, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகிநாசமாயின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...