வேகமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் - கோவையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருவதோடு, காண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்றுபோல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் எந்தவித காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சுகாதாரத் துறையினரிடம் தெரிவிக்க கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக நாள்தோறும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம் மூலம் தினசரி ஐந்தாயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுகின்றனர். இவர்கள் 180 முதல் 200 பேருக்கு அனைத்து விதமான காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தீவிர பாதிப்பு இல்லாத மருந்துகள் வழங்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் தற்போது 12000 கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களுக்கு எந்த விதமான அல்லது லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கு சிகிச்சை பெற்றாலும் அந்த பகுதியில் கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு, பள்ளிக்கு வரும் மாணவர்களின் விவரங்களை அளிக்க மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து அளிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை அந்த அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மூலம் சோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...