கோவையில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 8 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் மருத்துவப்படி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆண்டிற்கான 8 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை மற்றும் 500 ரூபாய் மருத்துவப்படி பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி உடனிருந்தார்.



அதன்படி அஞானமணி, இராமலிங்கம், செல்வராசு, சாமியப்பன், நரசிம்மன், இருதய சாமி, கிருஷ்ணரால் மற்றும் அகூத்தரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 01.04.202 முதல் திங்கள் தோறும் ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4,000 வழங்கப்படும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் மறைவுக்குப் பின்னர் இவர்களது மரபுரிமையர் என இவர்களால் குறிப்பிடப்பட்டுள்ள மரபுரிமையருக்கு நடைமுறையில் உள்ள விதிப்படி உரிய சான்றுகளின் அடிப்படையில் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என ரூ.3000 எனும் வீதத்தில் திங்கள்தோறும் வழங்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் தமிழ்நாட்டிற்குள் எங்கும் சென்று வர இலவசப் பேருந்து பயணச் சலுகையும் வழங்கப்படுகின்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...