ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் யானையின் உடல் கண்டெடுப்பு

கோவை ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்ததுள்ளனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரி அசோக்குமார் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த யானை இறந்து ஒரு வாரம் ஆகி இருக்கலாம் என்றும், நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று உடற்கூறாய்வு மேற்கொண்டு யானை இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறியவுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...