ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் யானையின் உடல் கண்டெடுப்பு

கோவை ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்ததுள்ளனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரி அசோக்குமார் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த யானை இறந்து ஒரு வாரம் ஆகி இருக்கலாம் என்றும், நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று உடற்கூறாய்வு மேற்கொண்டு யானை இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறியவுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...