ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் யானையின் உடல் கண்டெடுப்பு

கோவை ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்ததுள்ளனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரி அசோக்குமார் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த யானை இறந்து ஒரு வாரம் ஆகி இருக்கலாம் என்றும், நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று உடற்கூறாய்வு மேற்கொண்டு யானை இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறியவுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...