மக்காசோளம் கொள்முதல் செய்து மோசடி - கோவை வியாபாரி தலைமறைவு!

கடலூர் மாவட்ட விவசாயிடம் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 116.640 டன் மக்காசோளம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த கோவை வியாபாரி சலீம் பாஷா (42) என்பவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: ரூ.32.30 லட்சம் மதிப்பிளான மக்காசோளம் கொள்முதல் செய்து பணம் தராமல் தலைமறைவான கோவை வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). விவசாயி. இவர் வியாபாரிகளுக்கு மொத்தமாக மக்காசோளம் விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சலீம் பாஷா (42), என்பவர் கடந்த 26 ஆம் தேதி செல்போன் மூலம் அழைத்து தனக்கு மக்காச்சோளம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதை அடுத்து குறைந்தபட்ச முன் பணம் மட்டுமே அனுப்பிய நிலையில் பார்த்திபன் பல தவணைகளாக ரூ.32.30 லட்சம் மதிப்பிலான, 119.640 டன் மக்காச்சோளத்தை லாரிகள் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் சலீம் பாஷா கூறியபடி வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் தனதுசெல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ததால் சந்தேகமடைந்த பார்த்திபன் கோவை வந்து பார்த்தபோது சலீம் பாஷா தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சலீம் பாஷா மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சலீம் பாஷாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...