மக்காசோளம் கொள்முதல் செய்து மோசடி - கோவை வியாபாரி தலைமறைவு!

கடலூர் மாவட்ட விவசாயிடம் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 116.640 டன் மக்காசோளம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த கோவை வியாபாரி சலீம் பாஷா (42) என்பவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: ரூ.32.30 லட்சம் மதிப்பிளான மக்காசோளம் கொள்முதல் செய்து பணம் தராமல் தலைமறைவான கோவை வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). விவசாயி. இவர் வியாபாரிகளுக்கு மொத்தமாக மக்காசோளம் விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சலீம் பாஷா (42), என்பவர் கடந்த 26 ஆம் தேதி செல்போன் மூலம் அழைத்து தனக்கு மக்காச்சோளம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதை அடுத்து குறைந்தபட்ச முன் பணம் மட்டுமே அனுப்பிய நிலையில் பார்த்திபன் பல தவணைகளாக ரூ.32.30 லட்சம் மதிப்பிலான, 119.640 டன் மக்காச்சோளத்தை லாரிகள் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் சலீம் பாஷா கூறியபடி வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் தனதுசெல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ததால் சந்தேகமடைந்த பார்த்திபன் கோவை வந்து பார்த்தபோது சலீம் பாஷா தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சலீம் பாஷா மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சலீம் பாஷாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...