மக்காசோளம் கொள்முதல் செய்து மோசடி - கோவை வியாபாரி தலைமறைவு!

கடலூர் மாவட்ட விவசாயிடம் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 116.640 டன் மக்காசோளம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த கோவை வியாபாரி சலீம் பாஷா (42) என்பவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: ரூ.32.30 லட்சம் மதிப்பிளான மக்காசோளம் கொள்முதல் செய்து பணம் தராமல் தலைமறைவான கோவை வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). விவசாயி. இவர் வியாபாரிகளுக்கு மொத்தமாக மக்காசோளம் விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சலீம் பாஷா (42), என்பவர் கடந்த 26 ஆம் தேதி செல்போன் மூலம் அழைத்து தனக்கு மக்காச்சோளம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதை அடுத்து குறைந்தபட்ச முன் பணம் மட்டுமே அனுப்பிய நிலையில் பார்த்திபன் பல தவணைகளாக ரூ.32.30 லட்சம் மதிப்பிலான, 119.640 டன் மக்காச்சோளத்தை லாரிகள் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் சலீம் பாஷா கூறியபடி வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் தனதுசெல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ததால் சந்தேகமடைந்த பார்த்திபன் கோவை வந்து பார்த்தபோது சலீம் பாஷா தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சலீம் பாஷா மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சலீம் பாஷாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...