மக்காசோளம் கொள்முதல் செய்து மோசடி - கோவை வியாபாரி தலைமறைவு!

கடலூர் மாவட்ட விவசாயிடம் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 116.640 டன் மக்காசோளம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த கோவை வியாபாரி சலீம் பாஷா (42) என்பவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: ரூ.32.30 லட்சம் மதிப்பிளான மக்காசோளம் கொள்முதல் செய்து பணம் தராமல் தலைமறைவான கோவை வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). விவசாயி. இவர் வியாபாரிகளுக்கு மொத்தமாக மக்காசோளம் விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சலீம் பாஷா (42), என்பவர் கடந்த 26 ஆம் தேதி செல்போன் மூலம் அழைத்து தனக்கு மக்காச்சோளம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதை அடுத்து குறைந்தபட்ச முன் பணம் மட்டுமே அனுப்பிய நிலையில் பார்த்திபன் பல தவணைகளாக ரூ.32.30 லட்சம் மதிப்பிலான, 119.640 டன் மக்காச்சோளத்தை லாரிகள் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் சலீம் பாஷா கூறியபடி வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் தனதுசெல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ததால் சந்தேகமடைந்த பார்த்திபன் கோவை வந்து பார்த்தபோது சலீம் பாஷா தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சலீம் பாஷா மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சலீம் பாஷாவை தேடி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...