கோவையில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோவை நீலிக்கோணம்பாளையத்தில் மதுபோதையில் மனைவி அனிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் சின்னதுரையை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் மதுரை வீரன் கோயில் பகுதியை சேர்ந்த அனிதா (வயது42). மருத்துவமனை துப்புரவு தொழிலாளி. இவரது கணவர் குமார். இவர்களுக்கு கார்த்திக் (வயது22) என்ற மகன் உள்ள நிலையில் அனிதா, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை (வயது48) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அனிதா தனது கணவரான சின்னதுரையுடன் இணைந்துஅடிக்கடி மது குடிப்பதும், அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு கார்த்திக் வேலைக்கு சென்று விட, வீட்டில் இருந்த அனிதா மது அருந்தியுள்ளார். இதனிடையே இரவில் வெளியே சென்றிருந்த சின்னதுரை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அனிதா, மதுபோதையில் இருந்த சின்னதுரையை கேவலமாக பேசியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த சின்னதுரை அனிதாவை தாக்கிய நிலையில்மது போதையில் அனிதாதிரும்ப தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தசின்னதுரை, அனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு, அதனை மறைக்க அனிதாவின் உடலை தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டது போல், சேலையின் ஒரு பகுதியை அனிதாவின் கழுத்தில் கட்டி தூக்கு மாட்டி தொங்க விட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் தூங்கியுள்ளார்.

இந்நிலையில்அதிகாலையில்அனிதாவின் தம்பியான முத்து என்பவர் வீட்டிற்கு வந்தபோது அனிதா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், எதுவும் தெரியாதது போல் அதிர்ச்சியை வெளிபடுத்திய சின்னதுரை, அனிதாவின் உடலை இறக்குமாறு கூற இருவரும் இணைந்து உடலை இறக்கியுள்ளனர்.

மேலும் உடலை அடக்கம் செய்துவிடலாம் என முடிவு செய்த நிலையில், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சின்னதுரையிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அனிதா வயிற்று வலியால் அவதிபட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தில் தாக்கியிருப்பதும், கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதும், மூச்சை திணற செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அனிதாவின் உறவினர்கள் மற்றும்சின்னதுரையிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், என் மனைவிக்கு எந்த விரோதிகளும் இல்லை, அவர் நல்ல முறையில் தான் இருக்கிறார் எனக்கும் அவருக்கும் எந்த சண்டையும் கிடையாது எனக்கூறியுள்ளார்.

போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என கருதிய சின்ன துரை திடீரென மாயமாகி விட்டார்.

இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சின்னதுரை இன்று சிங்காநல்லூரில் பிடிபட்டார்.

அவரிடம் விசாரித்தபோது, மனைவி அனிதாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து சின்னதுரையை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...