பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றுக..! - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு சிரமத்துடன் கிராமங்களில் இருந்து உற்பத்தி செலவை கூட‌ சமாளிக்க முடியாமல் பாலை உற்பத்தி செய்கின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: பல்லடத்தில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம், கொசவம்பாளையம் சாலையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் எம்எல்ஏ எம்எஸ்எம் ஆனந்தன், முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.



மக்களை திசை திருப்புவதற்காக திமுக அரசு, எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், திமுக ஆட்சியில் சட்ட-ஒழுங்கு கேலி கூத்தாகி உள்ளதாகவும், அதிமுக மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டால், தமிழகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பல்லடம் எம்எல்ஏ எம்எஸ்எம் ஆனந்தன் தெரிவித்தார்.



இதை தொடந்து தமிழக முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், அதிமுக மீது பொய் வழக்கு தொடுப்பதை திமுக அரசு நிறுத்தி கொள்ளவேண்டும். அதிமுகவிற்கு வழக்குகளை சந்திப்பது புதிதல்ல. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து சேர்ந்து செயல்படுவது அவருடைய விருப்பம்.

பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு சிரமத்துடன் கிராமங்களில் இருந்து உற்பத்தி செலவை கூட‌ சமாளிக்க முடியாமல் பாலை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் இன்று கூடுதல் விலை கேட்டு போராட்டம் நடத்தி வரும் பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...