திமுகவை கண்டித்து உடுமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு பதிந்துள்ள பொய் வழக்கை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் பேசிய திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் தாங்கள் கொண்டு வந்ததாக கூறி பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்கள். மேலும், மக்களை தொடர்ந்து ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர்.



அதிமுகவினர் மீதுதினந்தோறும் பொய்வழக்குகளை போட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு போட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...