திமுகவை கண்டித்து உடுமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு பதிந்துள்ள பொய் வழக்கை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் பேசிய திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் தாங்கள் கொண்டு வந்ததாக கூறி பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்கள். மேலும், மக்களை தொடர்ந்து ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர்.



அதிமுகவினர் மீதுதினந்தோறும் பொய்வழக்குகளை போட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு போட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...