திமுகவை கண்டித்து உடுமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு பதிந்துள்ள பொய் வழக்கை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் பேசிய திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் தாங்கள் கொண்டு வந்ததாக கூறி பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்கள். மேலும், மக்களை தொடர்ந்து ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர்.



அதிமுகவினர் மீதுதினந்தோறும் பொய்வழக்குகளை போட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு போட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...