பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ - இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட தமன்னா கைதானதை தொடர்ந்து, மாற்றம்பாளையத்தை சேர்ந்த கெளதம் என்ற இளைஞரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் சமீபத்தில் சத்திய பாண்டியன், கோகுல் என்ற இரண்டு ரவுடிகள் அடுத்தடுத்த நாளில் படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் நீதிமன்ற சாலையில் கொல்லப்பட்டார். ரவுடி சத்தியபாண்டியன் ஆவாரம்பாளையம் பகுதியில் துரத்தி துரத்தி வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையிலே கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரவுடிகளின் கொலை பின்னணியில் உள்ள கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கைதான ரவுடிகளிடம் விசாரணை நடந்தன. விசாரணையில் சில ரவுடிகள் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு வன்மம் கக்கியது தெரியவந்தது. இந்த நிலையில்,சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரை பிடிக்க, போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட, முதல் தேடுதல் வேட்டையில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையிலே பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டிருந்த பெண் தமன்னா என்கிற வினோதினி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், கோவை மாற்றம்பாளையம் பகுதியைச் சார்ந்த கௌதம் என்ற இளைஞர், தமது சமூக வலைதள பக்கத்தில் பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவிட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்த போலீசார், இளைஞர் கௌதமை பிடித்துகுனியமுத்தூர் ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...