கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை - டீ மாஸ்டர் கைது!

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் டீக்கடையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த டீ மாஸ்டர் வைரமூர்த்தி என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகே பின்புறம் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பேக்கரி அருகாமையில் ரத்தினபுரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பேக்கரியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை பேக்கரியில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் புகையிலைப் பொருட்களை விற்றதற்காக பேக்கிரியிலிருந்த வைர மூர்த்தி என்ற டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து சிகரெட் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட டீ மாஸ்டரை பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...