கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை - டீ மாஸ்டர் கைது!

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் டீக்கடையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த டீ மாஸ்டர் வைரமூர்த்தி என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகே பின்புறம் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பேக்கரி அருகாமையில் ரத்தினபுரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பேக்கரியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை பேக்கரியில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் புகையிலைப் பொருட்களை விற்றதற்காக பேக்கிரியிலிருந்த வைர மூர்த்தி என்ற டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து சிகரெட் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட டீ மாஸ்டரை பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...