உடுமலையில் தீப்பிடித்து எரிந்த லாரி - போலீசார் தீவிர விசாரணை!

உடுமலை அருகே கல்லாபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மணிகண்டன் என்பவரின் லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் தனக்குச் சொந்தமான லாரியில் அவரே டிரைவராக இருந்து ஓட்டியும் வந்தார்.

இந்த நிலையில் கல்லாபுரத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு உடுமலை வெஞ்சமடை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு மக்காச்சோள மூட்டைகளை இறக்கி விட்டு அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு கல்லாபுரம் சென்று விட்டார்.



இந்தநிலையில் அதிகாலை லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. சற்று நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து பலத்த போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடுபோல மாறியது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...