உடுமலையில் தீப்பிடித்து எரிந்த லாரி - போலீசார் தீவிர விசாரணை!

உடுமலை அருகே கல்லாபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மணிகண்டன் என்பவரின் லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் தனக்குச் சொந்தமான லாரியில் அவரே டிரைவராக இருந்து ஓட்டியும் வந்தார்.

இந்த நிலையில் கல்லாபுரத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு உடுமலை வெஞ்சமடை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு மக்காச்சோள மூட்டைகளை இறக்கி விட்டு அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு கல்லாபுரம் சென்று விட்டார்.



இந்தநிலையில் அதிகாலை லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. சற்று நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து பலத்த போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடுபோல மாறியது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...