சாதாரண மனிதனும் தொழில் நுடபத்தை பயன்படுத்த வேண்டும்..! - அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் முதல்வர் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.



கோவை: சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற உள்ள "யூமாஜின் கருத்தரங்கம் பற்றி விளக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சந்தேகங்களை அமைச்சரிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:



சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் "யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும்.

சாதாரண மனிதர்களும் தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கடந்த 2 வருடங்களில் 20 சதவீதம் ஐடி துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட நகரங்களிலும் ஐடி துறைக்கான கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற நாடுகளில் ஐடி நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தது போல தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...