ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட தமன்னா - போலீசார் தீவிர விசாரணை

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்டு, சங்ககிரியில் மறைந்திருந்த தமன்னாவை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். தமன்னா மீது ஆயுத சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் டிக் டாக் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தினர். இந்த நிலையிலே டிக் டாக் வீடியோக்களை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்களை கைது செய்ய திட்டமிட்டனர். அதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவுக்கிணங்க, தனிப்படை போலீசார் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட 48 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்த விக்கு மற்றும் தமன்னா மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடினர். சங்ககிரியில் இருந்த தமன்னாவை பிடித்த போலீஸார், கோவை அழைத்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஆயுதசட்டம் உட்பட இரு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், அவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், தமன்னா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பயங்கர ஆயுதங்களுடன் வெளியிட்ட வீடியோ குறித்து பேசி இருந்த தமன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டு இருந்ததாகவும், தற்போது திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தற்பொழுது கர்ப்பிணியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் தமன்னா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...