ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட தமன்னா - போலீசார் தீவிர விசாரணை

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்டு, சங்ககிரியில் மறைந்திருந்த தமன்னாவை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். தமன்னா மீது ஆயுத சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் டிக் டாக் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தினர். இந்த நிலையிலே டிக் டாக் வீடியோக்களை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்களை கைது செய்ய திட்டமிட்டனர். அதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவுக்கிணங்க, தனிப்படை போலீசார் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட 48 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்த விக்கு மற்றும் தமன்னா மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடினர். சங்ககிரியில் இருந்த தமன்னாவை பிடித்த போலீஸார், கோவை அழைத்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஆயுதசட்டம் உட்பட இரு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், அவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், தமன்னா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பயங்கர ஆயுதங்களுடன் வெளியிட்ட வீடியோ குறித்து பேசி இருந்த தமன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டு இருந்ததாகவும், தற்போது திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தற்பொழுது கர்ப்பிணியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் தமன்னா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...