கோவை அருகே கல்லால் தாக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் - 5 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவன ஊழியர் ஆல்பின் அகஸ்டின் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, கல்லால் தாக்கி, நிறுவனத்தின் ஜீப்பின் கண்ணாடியின் உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளத்தை சேர்ந்தவர் ஆல்பின் அகஸ்டின்(வயது 23). கிணத்துக்க டவு அருகே கொண்டம்பட்டிபுத்தூர் அம்மன் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

மேலும், கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆல்பின் அகஸ்டின் நேற்று முன்தினம் இரவில் கொண்டம்பட்டியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.



அப்போது கொண்டம்பட்டி காமாச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த காவியபிரபு(வயது23), வீரகுமார் (வயது23), விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மணிகண் டன் (வயது27), பெரிய வீதியை சேர்ந்த பிரபாகரன் (வயது20), நடராஜன் (வயது33) ஆகியோர் ஆல்பின் அகஸ்டினிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை கல்லால் தாக்கினர்.



மேலும், அங்கிருந்த தனியார் நிறுவன ஜீப்பின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர். இனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்துசம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக் டர் ஜெகதீசன் மற்றும் போலீசார்தகராறில் ஈடுபட்ட வீரகுமார், காவிய பிரபு, மணிகண்டன், பிரபாகரன், நடராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...