கோவையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கோவை பீளமேட்டில் கதிரேசன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் அமெரிக்க டாலர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகர் மெளனசாமி நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிஜெயராணி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, அதேப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் அவர் கோவைக்கு திரும்பினார்.

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.50 லட்சம் தொகை, 19 பவுன் நகை, 4,800 எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்கள், 160 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...