வடவள்ளி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு - சாலை மறியலில் ஈடுபடவும் பொதுமக்கள் முடிவு!

வடவள்ளி அருகேயுள்ள லட்சுமி நகரில் குடியிருப்புக்கு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், காவல் நிலையத்திலும்,மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்க உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை வடவள்ளியை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இன்று காலை தனியாருக்கு செந்தமான இடத்தில் பொக்லைன் கொண்டு ஆழமாக குழி தோண்டும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து அருகில் குடியிருப்பவர்கள் கேட்டபோது, செல்போன் டவர் அமைக்க வேலை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் லட்சுமி நகர் குடியிருப்பு சங்கத்தினர் வாட்ஸ்அப் குழுவில் பரவியது.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் கிணறு இருந்ததாகவும், செல்போன் டவர் அமைத்தால் இங்கு வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், மற்றும் பறவைகள் கதிர் வீச்சால் பாதிக்கப்படும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து உடனடியாக பணியை நிறுத்த வேண்டும் வலியுறுத்தினர்.

மேலும், நாளை வடவள்ளி காவல் நிலையம் மற்றும் மாவட்டம் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட உள்ளதாகவும் குடியிருப்பு சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...