பயம், பதட்டமின்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்..! - கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து

கோவை உட்பட தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான காலகட்டம். இந்த பொதுத் தேர்வு, தனிப்பட்ட மாணவரின் எதிர்கால மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் கூட. இது நவீன தொழில்நுட்ப யுகம்.

ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்து கிடக்கும் திறனுக்கேற்ப படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, பயம், பதட்டமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...