தாராபுரம் அருகே அரசு அலுவலகம் முன்பு மது விற்பனை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் சாலையில் காரையூரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரமியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து மதுக்கடையில் உள்ளவர்கள் காலையில் 6 மணி முதல் டீ குடிப்பது போல் கூலித்தொழிலாளர்களுக்குத் தினசரி அப்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகிலும், கிராம நிர்வாக அலுவலக முன்பும் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்துக் கொண்டு மது விற்கப்பட்டு வருகிறது.

அதனை அந்த பகுதி கூலித்தொழிலாளர்கள் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி குடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் தினசரி சாலையில் சுற்றித் திரிந்து வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மதுவிற்கும் நபர் தனது இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்பனை செய்கிறார்.

இவ்வாறு மது விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...