தாராபுரம் அருகே அரசு அலுவலகம் முன்பு மது விற்பனை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் சாலையில் காரையூரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரமியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து மதுக்கடையில் உள்ளவர்கள் காலையில் 6 மணி முதல் டீ குடிப்பது போல் கூலித்தொழிலாளர்களுக்குத் தினசரி அப்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகிலும், கிராம நிர்வாக அலுவலக முன்பும் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்துக் கொண்டு மது விற்கப்பட்டு வருகிறது.

அதனை அந்த பகுதி கூலித்தொழிலாளர்கள் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி குடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் தினசரி சாலையில் சுற்றித் திரிந்து வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மதுவிற்கும் நபர் தனது இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்பனை செய்கிறார்.

இவ்வாறு மது விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...