குண்டடம் அருகே பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு

குண்டடம் அருகேயுள்ள கெத்தல்ரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன்(75). மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவர் சமையல் அறையில் சமைத்த போது, அங்கு மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: குண்டடம் அருகே முதியவரை பாம்பு கடித்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள கெத்தல்ரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் (75), மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 8ஆம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டருக்கு அடியிலிருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்தது.

வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த முத்தன் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...