நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு: பொள்ளாச்சியில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு!

நாளைய தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில் பொள்ளாச்சியில் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் +2 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நாளை (13.3.2023) காலை தொடங்க உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தனி தேர்வர்கள் உட்பட 4,143 மாணவர்கள் 4,437 மாணவிகள் என மொத்தம் 8,580 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

இதற்காக தனித்தேர்வு எழுதும் மையம் உட்பட மொத்தம் 37 மையங்களில் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

முதன்மை தேர்வாளர்கள் துறை அலுவலர்கள் என 74 பேர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 640 பேரும், அலுவலகப் பணியாளர்கள் வழித்தட அலுவலர்கள் பறக்கும் படை என மொத்தம் 800 க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 7 ஒன்றியங்ளில் பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, வால்பாறை என மூன்று வினாத்தாள் மையங்கள் இருப்பு மையங்களாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த மையங்களில் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



தேர்வு எழுதும் மையங்களில், மேஜையில் ஹால் டிக்கட் எண்கள் எழுதப்பட்டு அரசு அறிவுறுத்தலின்படி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தவறுகள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...