வால்பாறை - அதிரப்பள்ளி சாலை 10 நாட்களுக்கு மூடல் : சாலை பராமரிப்பு காரணமாக நடவடிக்கை!

கோவை வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி உள்ளது. வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக மழுக்கப்பாறை அதிரப்பள்ளி செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையை சுற்றுலா பயணிகளும், அரசு பேருந்தும் கேரளாவிற்கு செல்வதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வனப்பகுதியில் செல்ல வேண்டும்.

வனப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் சாலையை பராமரிக்க கேரளா அரசு பணிகள் செய்து வருகிறது. தார் சாலை அமைக்கும் பணி தீவிரம் அடைந்ததால் மழுக்கப்பாறை வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்ல 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



மழுக்கப்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பகுதி வரை தார் சாலை பராமரிப்பு நடப்பதால் இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா வாகனங்கள் தனியார் வாகனங்கள் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...