திருப்பூரில் மாநில அளவிலான காதி மற்றும் கிராம தொழில் ஆணைய கண்காட்சி - தொடங்கி வைத்த எம்.எஸ்.எம்.இ தலைவர்!

திருப்பூர் அடுத்த வாலிபாளையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மாநில அளவிலான கண்காட்சி இன்று தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் காதி மற்றும் கிராம ஆணையத்தின் மாநில அளவிலான கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சாலையில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் காதி கண்காட்சி இன்று முதல் வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் கலந்து கொண்டு, கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரதம மந்திரியின் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் துவங்க உதவித்தொகை வழங்கப்பட்டது.



இந்த விழாவில் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே, இயக்குனர் ரித்தேஷ் குமார், மாநில இயக்குனர் பி.என். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...