கோவை விமான நிலையத்தில் இருந்து ஓராண்டில் 25 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்!

2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை கடந்த ஓராண்டில் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாகவும், விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் பயணிகள் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, பூனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலுக்கு முன், தினசரி 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அப்போது, ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,

கொரோனா பரவலுக்கு பின் உள்நாட்டு விமான போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது. வெளிநாட்டு பிரிவில் முன்பு ஷார்ஜாவுக்கு ஒரு விமானம், சிங்கப்பூருக்கு 2, இலங்கைக்கு 1 வீதம் மொத்தம் 4 விமானங்கள் இயக்கப்பட்டன.

தற்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இயக்கப் பட்டுவந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 2 விமானங்கள் மட்டுமே சர்வதேச பிரிவில் இயக்கப்படுகின்றன.

தினமும் குறைந்தபட்சம் 7,500 பயணிகளும், பண்டிகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் தினமும் 10 ஆயிரம் பயணிகளும் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2022 ஏப்ரல் முதல் தற்போது வரை, கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. தொற்று பரவலுக்கு பின் விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இருப்பினும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையால் இட நெருக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதே தீர்வாகும்.

நிலஆர்ஜித பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தமிழக அரசு நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலங்கள் ஒப்படைக்கப்பட்டால் ஓடு தள பாதை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளும் உடனடியாக தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...