காய்ச்சல், தலைவலி பாதிப்பு அதிகரிப்பு - வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல், தலைவலி, இருமல் அதிகரித்ததை தொடர்ந்து, வால்பாறை, உருளிகல், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் 62 எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வால்பாறை, சோலையார் அணை பகுதியில் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் மருத்துவமனை சார்பில், வால்பாறை, கக்கன் காலனி, உருளிகல் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



வால்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டாக்டர் சாமிநாதன் தலைமையிலும், கக்கன் காலனி பகுதியில் சித்தா டாக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலும், உருளிகல் எஸ்டேட் பகுதியில் டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையிலும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...