காய்ச்சல், தலைவலி பாதிப்பு அதிகரிப்பு - வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல், தலைவலி, இருமல் அதிகரித்ததை தொடர்ந்து, வால்பாறை, உருளிகல், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் 62 எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வால்பாறை, சோலையார் அணை பகுதியில் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் மருத்துவமனை சார்பில், வால்பாறை, கக்கன் காலனி, உருளிகல் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



வால்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டாக்டர் சாமிநாதன் தலைமையிலும், கக்கன் காலனி பகுதியில் சித்தா டாக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலும், உருளிகல் எஸ்டேட் பகுதியில் டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையிலும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...