கோவையில் நடந்து சென்றவரை பாட்டிலால் குத்தி வழிப்பறி - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை லங்கா கார்னர் பகுதியில் நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி மனோகரன் என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, குவாட்டர் பாட்டிலால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி கூலித் தொழிலாளி மனோகரன் (வயது37) என்பவர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த கும்பல் குவாட்டர் பாட்டிலை உடைத்து மனோகரனை நெஞ்சுப் பகுதியில் குத்தியதால், அவர் வலியில் அலறித் துடித்தார். காயமடைந்த மனோகரன், அவரின் நண்பரிடமிருந்த 2 செல்ஃபொன்களை பறித்துக்கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

காயமடைந்த மனோகரன், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...