ஏப்.1 முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்வு? - பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. காருக்கு ரூ.5 முதல் ரூ.15-வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சுங்கச்சாவடிகளிலேயே நேரடியாக கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டி இருந்ததோடு, காலவிரயமும் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிக்கான சுங்க கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்த கட்டண உயர்வின் அடிப்படையில், ஏப்ரல் 1ம் தேதி முதல்காருக்கு ரூ. 5 முதல் 15 வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் பரனுர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

சுங்கக்கட்டணம் உயர்ந்தால் சரக்கு வாகனங்களுக்கான கட்டணமும் அதிகரித்து, விலைவாசி உயர்வு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நடவடிக்கைக்கு லாரி உரிமையாளர் சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...