ஏப்.1 முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்வு? - பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. காருக்கு ரூ.5 முதல் ரூ.15-வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சுங்கச்சாவடிகளிலேயே நேரடியாக கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டி இருந்ததோடு, காலவிரயமும் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிக்கான சுங்க கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்த கட்டண உயர்வின் அடிப்படையில், ஏப்ரல் 1ம் தேதி முதல்காருக்கு ரூ. 5 முதல் 15 வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் பரனுர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

சுங்கக்கட்டணம் உயர்ந்தால் சரக்கு வாகனங்களுக்கான கட்டணமும் அதிகரித்து, விலைவாசி உயர்வு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நடவடிக்கைக்கு லாரி உரிமையாளர் சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...