கோவை தொண்டாமுத்தூரில் தூக்கில் சடலமாக தொங்கிய தம்பதி - போலீசார் விசாரணை!

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அய்யாசாமி - வெண்ணிலா தம்பதி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது35). இவர் ஜெராக்ஸ் கடை மற்றும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விற்பனை தகரறாகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (வயது30). 7 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதைடுத்து, அக்கம் பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதைடுத்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அய்யாச்சாமிக்கு ரூ 2.5 கோடி கடன் இருந்ததாகவும், அண்மையில் கட்டிய வீடும் கடன் வாங்கி கட்டியதால் பொருளாதார சிரமத்தில் இருந்து வந்ததாகவும், தற்கொலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...