கோவையில் கிரேன் மோதி முதியவர் பலி - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை சிங்கநால்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்துச் சென்ற முதியவர் மருதாச்சலம் மீது அந்த வழியாக வந்த கிரேன் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த முதியவர் மருதாச்சலம் (வயது70). இவர் சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஆடு மேய்த்துவந்தார். இந்த நிலையில், இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வேல்முருகன் என்ற இளைஞர் ஓட்டி வந்த கிரேன், சாலையில் திரும்பும் பொழுது அதன் முன்பக்கம் முதியவரின் மேல் இடித்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.



பின்னர் அந்த வாகனத்தின் டயர் முதியவர் மருத்தாசலம் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது நண்பர் மணிமாறன் என்பவர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கிரேன் ஓட்டுநர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஆதரவின்றி இருக்கும் ஆடு மேய்க்கும் முதியவர் மருதாச்சலத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...