கோவையில் கிரேன் மோதி முதியவர் பலி - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை சிங்கநால்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்துச் சென்ற முதியவர் மருதாச்சலம் மீது அந்த வழியாக வந்த கிரேன் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த முதியவர் மருதாச்சலம் (வயது70). இவர் சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஆடு மேய்த்துவந்தார். இந்த நிலையில், இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வேல்முருகன் என்ற இளைஞர் ஓட்டி வந்த கிரேன், சாலையில் திரும்பும் பொழுது அதன் முன்பக்கம் முதியவரின் மேல் இடித்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.



பின்னர் அந்த வாகனத்தின் டயர் முதியவர் மருத்தாசலம் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது நண்பர் மணிமாறன் என்பவர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கிரேன் ஓட்டுநர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஆதரவின்றி இருக்கும் ஆடு மேய்க்கும் முதியவர் மருதாச்சலத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...