கோவை வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரில் பழக்கடை நடத்தி வரும் பாலமுருகன் என்பவரை, தொழில் போட்டி காரணமாக தகாத வார்த்தைகளில் பேசி, கல்லால் தாக்கிய பிரேம்குமார் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (19). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையின் அருகே வெள்ளலூர் அம்மன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவரும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

தொழில் ரீதியாகப் பாலமுருகன் மற்றும் பிரேம்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பாலமுருகன் கடையிலிருந்த போது அங்குச் சென்ற பிரேம்குமார் மற்றும் தங்கவேல் (40) ஆகிய இருவரும் பாலமுருகனை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், பாலமுருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார் மற்றும் தங்கவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...