கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’ என்று, ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஜமேசா முபின் (வயது29). என்பவர் உயிரிழந்தார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அப்போதே தகவல் வெளியானது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக இத்தனை நாள்கள் எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.



இந்த நிலையில் `கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’என ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூலம் இரண்டு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக 200 பேரைச் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து கண்காணித்துவருகிறோம். தற்போது ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதால் அவர்களின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு உண்மையிலேயே பொறுப்பேற்றிருக்கிறதா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது தகவல் வெளியிட்டிருக்கிறார்களா? என்றும் விசாரித்துவருகிறோம், என்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...