கோவை மத்திய சிறை கைதிகள் நலன் கருதி மேலும் ஒரு பெட்ரோல் பங்க் திறக்க திட்டம்!

கோவை மத்திய சிறை கைதிகள் நலனுக்காக நஞ்சப்பா சாலையில் செயல்பட்டு பெட்ரோல் பங்க் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே மற்றொரு பெட்ரோல் பங்கை திறக்க சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிறைத்துறை சார்பில் 2வது பெட்ரோல் பங்கை திறக்க திட்டமிடப்பட்டு வருவதாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மத்திய சிறையில் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் டாக்டர் நஞ்சப்பா சாலையில், ஏற்கனவே ஒரு பெட்ரோல் பங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சிறை அங்காடியும் தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்கில் சிறை கைதிகள் 30 பேரும், அலுவலர்கள் 10 பேரும், சிறை அங்காடியில் 4 பேரும் வேலை பார்க்கின்றனர். சிறை நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.

இதற்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த சிறை நிர்வாகம் 2வது பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் பேருந்து நுழையும் இடத்துக்கு அருகே பாரதியார் சலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, மற்றொரு பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

இதுகுறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறியதாவது, டாக்டர் நஞ்சப்பா சாலையில் சிறை நிர்வாகம் நடத்தும் பெட்ரோல் பங்க் தான் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பங்குகளின் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.

சுத்தமான பெட்ரோல் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 முதல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.

பாரதியார் சாலையில் புதிதாக தொடங்கப்படும் பங்க் மூலம் கைதிகள் 30 பேருக்கும், அலுவலர்கள் 10 பேருக்கும் வேலை கிடைக்கும். இதில் வேலை பார்க்கும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதால், அவர்களின் குடும்பத்தினரும் பயன் பெறுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...