உலக மகளிர் தினம் - பல்லடம் அரசு பள்ளியில் பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

மகளிர் தினத்தை ஒட்டி சட்டப்பணிகள் குழு சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து நீதிபதிகள் சித்ரா, சந்தான கிருஷ்ணசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் பல்லடம் நீதிபதிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா,சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, மூத்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்தும் பள்ளி குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...