பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய கவுன்சிலர் - வண்ணப்பொடிகளை தூவி உற்சாகம்!

பல்லடம் அடுத்த சித்தம்பலம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன், 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை வண்ணப் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களுடன், 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் தமிழர்களோடு வடமாநில தொழிலாளர்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இன்று பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், பல்லடம் நகராட்சி 18வது வார்டு உறுப்பினர் சசிரேகா ரமேஷ்குமார் தனது குடும்பத்துடன் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வண்ண பொடிகளை பூசி வடமாநில தொழிலாளர்களோடு ஹோலி பண்டிகையை கொண்டாடினார். வட மாநில தொழிலாளர்களும் அவருக்கு வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.



மேலும், வடமாநில இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.



பல்லடம் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்போம் என்றும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார் உறுதி அளித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...